search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர்.
    • ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.

    நாகர்கோவில்:

    பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்ட ரெயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    இன்று அதிகாலையில் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலை 5.30 மணியளவில் நெல்லை ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது ஏராளமான பயணிகள் நாகர்கோவிலுக்கு வருவதற்காக ரெயிலில் ஏறினர். அதிகாலை நேரம் என்பதால் வெளியூர்களில் இருந்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர்.

    அந்த ரெயிலின் எஸ்-1 பெட்டியில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒரு வரும் பயணம் செய்தனர். நெல்லை வரை மேலடுக்கு படுக்கையில் (இருவரும் ஒரே இருக்கையில் வந்தனர்) வந்த ஜோடி, சிறிது நேரத்தில் அந்த பெட்டியில் ஆட்கள் இல்லாத இருக்கைக்கு சென்றது.

    பின்பு இருவரும் ஒரே இருக்கையில் அமர்ந்து சில்மிஷத்தை தொடங்கினார்கள். நேரம் செல்லச் செல்ல அந்த ஜோடியினர் எல்லை மீறி சென்றனர். இருவரும் மாறி மாறி முத்தமழை பொழிந்தனர். ஓடும் ரெயிலில் மாறி மாறி கட்டி அணைப்பது, முத்த மழை பொழிவது என சல்லாப்பத்தை தொடர்ந்தனர்.

    அந்த பெட்டியில் மற்ற பயணிகள் இருப்பதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் அத்துமீறல் எல்லை மீறி செல்லவே, அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் முகம் சுளித்தனர். மேலும் அந்த ஜோடியை எச்சரித்தனர்.

    ஒரு சில பயணிகள் ரெயிலில் இப்படி செய்யலாமா? என கேட்டு கண்டித்தது மட்டுமின்றி அறிவுரையும் கூறினர். இதனால் அந்த ஜோடி முகத்தை மறைந்தபடி அமர்ந்து கொண்டது. இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தபோதே பெங்களூரு ரெயில், நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இதையடுத்து அந்த ஜோடி ரெயிலை விட்டு இறங்கி தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது. அந்த ஜோடி நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு வீட்டிற்கு வரும் போது ஓடும் ரெயிலில் எல்லை மீறியதும் தெரிய வந்தது.

    ரெயில்களில் இது போன்ற அறுவறுக்கத்தக்க செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதனால் குடும்பத்துடன் வரும் பயணிகள் முகம் சுளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ரெயில் பெட்டிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டால் இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×